tamilnadu

img

மாட்டிறைச்சித் திருவிழா ரத்து!

கொல்கத்தா:
கொல்கத்தாவில், ஜூன் 23-ஆம் தேதி மாட்டிறைச்சி உணவு திருவிழா நடைபெறுவதாக இருந்தது. கொல்கத்தாவைச் சேர்ந்த உணவு விடுதி ஒன்று, இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. 

இந்நிலையில், சங்-பரிவாரின் மிரட்டல்க காரணமாக, மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவை, உணவு விடுதி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.மாட்டிறைச்சித் திருவிழாவிற்கு, பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் நேரடி மிரட்டல்களும் விடுத்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களில் ஒருவருக்கு மட்டும் 300 அழைப்புகள் வந்துள்ளன. இதனால், நாங்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளோம். இந்த காரணத்திற்காக கொல் கத்தா பீப் திருவிழாவை ரத்து செய்துள்ளோம் என்று ஏற் பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.